தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்குவதாக அறிவித்த நிலையில் அவருடைய கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையமும் அங்கீகாரம் கொடுத்தது. அதன் பிறகு கட்சிக்கொடி மற்றும் கட்சி பாடல் உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்திய விஜய் கடந்த மாதம் முதல் மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தார். இந்த மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற பகுதியில் நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்காக நடிகர் விஜய் விருந்து கொடுக்க இருக்கிறார்.

அதன்படி இன்று சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் விவசாயிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு விருந்து வழங்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழகத்தில் நிர்வாகிகளும் கலந்து கொள்வதாக கூறப்படுகிறது. மேலும் சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் முன்னதாக விஜய் தனக்காக இடம் வழங்கி விவசாயிக்கு ஒரு மாடு வழங்கிய நிலையில் அந்த மாடு சரியான முறையில் பால் கறக்க வில்லை என்று புகார் எழுந்ததால் பின்னர் புதிய மாடு ஒன்றினை கட்சியினர் மூலம் வாங்கிக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.