தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நேற்று செயற்குழு கூட்டமும் நடந்து முடிந்தது. இந்த செயற்குழு கூட்டத்தின் போது மொத்தம் மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு கண்டனம் தெரிவித்து 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடவில்லை எனில் மக்களுக்காக சட்ட ரீதியான போராட்டத்தை கையில் எடுக்கவும் தயங்கமாட்டோம் என்று விஜய் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் விஜய் தற்போது தன்னுடைய முதல் போராட்டத்தினை தொடங்க இருக்கிறார். அதாவது இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை கைது செய்து வரும் நிலையில் அதற்கு நிரந்தர தீர்வு காணும் விதமாக போராட்டத்தில் இறங்க விஜய் முடிவு செய்துள்ளாராம். இதற்காக நேற்று நடந்த கூட்டத்தின் போது முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாகவும் விரைவில் விஜய் தலைமையில் மிகப்பெரிய அளவில் மீனவர்களுக்காக போராட்டம் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே விஜய்க்கு மீனவர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.