சேலம் மாவட்டத்தில் உள்ள குகை பகுதியில் பசுபதி சண்முகப்பிரியா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு வெற்றிவேல்(6), வெற்றிமாறன்(3) என்ற இரண்டு மகன்கள் இருந்துள்ளனர். இந்த நிலையில் சண்முகப்பிரியாவிற்கு பசுபதியின் நண்பரான தமிழரசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. ஒரு கட்டத்தில் சண்முகப்பிரியா தனது கணவரை விட்டுவிட்டு தமிழரசனுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த நிலையில் உச்சகட்ட மது போதையில் இருந்த தமிழரசனும் சண்முகப்பிரியாவும் அழுது கொண்டிருந்த வெற்றிமாறனை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனை பார்த்த வெற்றிவேல் அக்கம் பக்கத்தில் இருந்தவர்களிடம் சென்று தனது தம்பியை தாக்குவதாக கூறியுள்ளான். உடனே அருகில் இருந்தவர்கள் படுகாயமடைந்த சிறுவனை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தத்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தமிழரசனையும் சண்முகப்பையாவையும் கைது செய்தனர். வெற்றிவேல் மழலை மொழியில் தமிழ் அப்பா எனது தம்பியை அடித்தார் என கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.