தமிழ்நாட்டில் உள்ள திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்து இனி பொதுமக்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொள்ளும் வகையில் மக்களுடன் ஸ்டாலின் ஆப் தொடங்கப்படவுள்ளது. ‘மக்களுடன் ஸ்டாலின்’ என்ற செயலியை  வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டாவில் நடைபெறும் முப்பெரும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இந்த செயலியில் திமுக அரசின் செயல்பாடுகள் மற்றும் ஒவ்வொரு தொகுதியை பற்றிய விரிவான தகவல்கள், அரசின் திட்டங்கள் குறித்த தகவல்களும் இடம்பெறும். மேலும் முதல்வரின் கள செயல்பாடுகளை இந்த செயலியில் அறிந்துகொள்ளலாம் என்றும் எல்லாருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற நோக்கில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.