கொரோனா தொற்று ஊரடங்கு காலத்திற்குப் பிறகு பெற்றோர்கள் பெரும்பாலானவர்கள் தனியார் பள்ளிகளில் பயின்று வந்த தங்களுடைய குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்தனர். மேலும் புதிதாகவும் பல குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வந்தனர். இதனால் தமிழக அரசு பள்ளிகளின் கல்வி தரம் மற்றும் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் விளைவால் கடந்த வருடம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது.

இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டானது வரும் 28ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் அரசு பள்ளிகளில் ஏப்., 17 முதல் 2023-24ஆம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேர்க்கையை அமைச்சர் அன்பில் மகேஷ் அன்றைய தினம் தொடங்கி வைக்க உள்ளார். இந்த நிலையில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி ஆணையர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி, மதிய உணவு, இலவச சீருடை, இலவச பாட புத்தகங்கள், இலவச நோட்டு புத்தகங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் மாணவர்கள் எண்ணிக்கை அரசு பள்ளியில் குறைவாகத்தான் உள்ளது. இதனை உடனடியாக மாற்றும் நோக்கத்தில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பகுதிகளில் “அரசு பள்ளிகளை கொண்டாடுவோம்” என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நடத்தப்படும். இந்த பேரணி நாளை முதல் 27ஆம் தேதி வரை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.