கோவையில் புதிதாக 20 லட்சம் சதுர அடியில் புதிய ஐடி பார்க் நிறுவப்படும் என்று தமிழ்நாடு 2024-25 பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும் தஞ்சை, சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடியில் நியோ டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலத்தில் இலவச வைஃபை வசதிகள் வழங்கப்படும். தமிழ் மொழி சார்ந்த தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி. தமிழகத்தில் முதல்முறையாக உலக ஸ்டார்ட் அப் மாநாடு என அசத்தல் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.