
தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக தமிழ் வளர்ச்சி இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சரால் தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என்று பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படுவது மட்டுமல்லாமல் முதல் பரிசு பெறும் மாணவர்கள் சென்னையில் நடைபெறும் மாநில போட்டியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படும்.
சென்னையில் நடைபெறும் மாநிலப் போட்டியில் கலந்துகொண்டு முதல் மூன்று இடத்தை பிடிக்கும் மாணவர்களுக்கு ஜூலை 18ஆம் தேதி தமிழ்நாடு நாள் விழாவில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும். சென்னை மாவட்ட அளவில் நடைபெறும் மாவட்ட போட்டியில் ஜூலை 9ஆம் தேதி சென்னை அண்ணா சாலையில் அரசினர் மதரசா ஐ ஆஜம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு பத்தாயிரம் ரூபாய், இரண்டாம் பரிசு ஏழாயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசு ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போட்டிகளுக்கான தலைப்புகள் : கட்டுரை :- ஆட்சிமொழி தமிழ்
பேச்சு : – 1.குமரி தந்தை மார்சல் நேசமணி 2.தென்னாட்டு பெர்னாட்ஷா பேரறிஞர் அண்ணா 3.முத்தமிழறி