தமிழ்நாட்டில் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆவின் பொருட்கள் விற்கப்படும் என்றும், UPI பேமண்ட் வசதி கொண்டு வரப்படும் என்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அவர், “ரேஷன் கடைகளில் விற்பனை செய்வது மட்டுமல்லாமல் ஆவினுடன் சேர்ந்து கூட்டுறவுத்துறை சார்பில் புதிய ஆவின் மையங்கள் திறக்கப்படும்.

ரேஷன் கடைகளில் UPI பேமண்ட் வசதி கொண்டு வரப்படும் மே மாதம் 10ஆம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களில் உள்ள ரேஷன் கடைகளில் ஜிபே, போன்பே, பேடிஎம் பயன்படுத்தும் வகையில் UPI வசதி ஏற்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார். கூட்டுறவு சங்கங்களில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.