தமிழ்நாடு மின்வாரியத்தில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு உதவி தொகையோடு தொழில் பழகுனர் பயிற்சி வழங்க மின்வாரியம் நிர்வாக அனுமதி வழங்கி உள்ளது. இது குறித்து பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மின் தொடர் அமைப்பு கழகம் ஆகியவற்றில் 500 டிப்ளமோ பொறியாளர்களுக்கு தொழில் பலன்கள் பயிற்சி வழங்கப்பட இருக்கிறது.

தேர்ந்தெடுத்து பயிற்சி வழங்கப்படும் 500 பேருக்கு உதவி தொகை உள்ளிட்ட வகையில் மாதம் 8000 என மொத்தம் 4.80 கோடி செலவு செய்யவும் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மின்வாரிய தலைவரின்  ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது. இதில் மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு 15 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.