சேலம் மாநகராட்சியில் பழைய பேருந்து நிலையம், பெரியார் பேரங்காடி, போஸ் மைதான வணிக வளாகம்,வ உ சி மார்க்கெட் மற்றும் நேரு கலையரங்கம் ஆகியவை மறு சீரமைப்பு பணிகளும் புதிய பேருந்து நிலையம் அருகில் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் தொங்கும் பூங்கா வளாகத்தில் வாகன நிறுத்துமிடம், ஆனந்தா பாலம் அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம் மற்றும் பள்ளப்பட்டு ஏறி புனரமைப்பு பணி உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் மூன்று நாள் சுற்றுப்பயணம் ஆக நேற்று மாலை சேலம் சென்றடைந்தார்.

அப்போது நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சமூக வலைத்தளங்களில் கணக்கு இல்லாதவர்கள் உடனே கணக்கை தொடங்குங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். இப்போதைய கால சூழலில் பேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் தான் எல்லாம். சமூக வலைத்தளத்தில் கணக்கை தொடங்கி நம் செய்திகளை மக்களிடம் கொண்டு சேருங்கள். எதிர்தரப்பில் பரப்பப்படும் போலி செய்திகளை முடக்க அனைவரும் செயலாற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.