தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற பல்வேறு கோரிக்கைகள் எழுந்த நிலையில் போக்குவரத்து கழகத்தில் காலியாக இருக்கும் 1619 பணியிடங்களை  நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 685 ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்ப இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

மேலும் கருணை அடிப்படையில் போக்குவரத்து கழகத்தில் பணி வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஊழியர்களுக்கு வாகன பராமரிப்பு ஊக்க தொகை மற்றும் சிறப்பு தொகை வழங்க வேண்டும் எனவும் அறிவித்துள்ளார்.