தமிழகத்தில் பெண்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு தற்போது பிங்க் நிற ஆட்டோ திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி சென்னையில் 250 பெண்களுக்கு ஆட்டோக்கள் வழங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக சென்னையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ள நிலையில் பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டத்தில் சென்னையில் வசிக்கும் விதவை மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இந்நிலையில் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்ட ஆட்டோக்கள் வழங்கப்படுவதால் மகளிர் பாதுகாப்பு கண்காணிக்கப்படும்.

இதனை வாங்குவதற்கு பெண்களுக்கு ஒரு லட்ச ரூபாய் வரையில் மானியம் வழங்கப்பட இருக்கிறது. இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் 10-ம் வகுப்பு முடித்திருப்பதோடு ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும். உங்க திட்டத்தில் 25 முதல் 45 வயதுக்கு உட்பட்ட பெண்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி சென்னை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் தகுதியுள்ள பெண்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம். பெண்களின் பாதுகாப்புக்காக பிங்க் நிற ஆட்டோக்கள் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தகுதியுள்ள மற்றும் திறமையுள்ள பெண்கள் திட்டத்தில் இணைந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைந்து நிலையில் தற்போது கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அதன்படி டிசம்பர் 10 ஆம் தேதி வரை கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது.