தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டமமானது வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளது. இது குறித்து நேற்று முன்தினம் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி, வழிகாட்டு நெறிமுறைகளுடன் கூடிய அரசாணை விரைவில் வெளியிடப்படும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் ஆயிரம் ரூபாய் திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்ப தலைவிகள் தேர்வாகியுள்ளனர். வயது வரம்பு நிர்ணயம் மற்றும் ஆண்டு வருமானம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.