தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இதனைத் தொடர்ந்து ஆவின் உள்ளிட்ட புதிய வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசு திடீர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி கூட்டுறவு பண்டக சாலைகளில் வருமானத்தை பெருக்குவதற்காக தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பால்,தயிர் மற்றும் நெய் போன்ற அனைத்து ஆவின் பொருள்களையும் விற்பனை செய்வதற்கு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மே மாதம் பத்தாம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டம் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.