தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் மக்களின் சிரமத்தை போக்க ரேஷன் கடைகளில் கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனர் உள்ளிட்ட பல வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் ஓராண்டுக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி செய்து தரப்படும் என கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். ரேஷன் கடைகளில் அரசால் வழங்கப்படும் பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும். வேறு பொருள்களை விற்பனை செய்யக்கூடாது. அனைத்து மாவட்டங்களிலும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை புணரமைத்திட திட்டமிட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.