
தமிழக அரசு தற்போது 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதாவது மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொதுமக்களுக்கான நலத்திட்ட உதவிகள் அவர்களை சென்றடைவதை கண்காணிக்கவும் கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதோடு இயற்கை பேரிடர் உள்ளிட்ட காலங்களில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து பணியாற்றி தேவையான நிவாரண மற்றும் மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் நாகை, நாமக்கல், புதுக்கோட்டை, கோவை, திருப்பூர், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, திருவண்ணாமலை, திண்டுக்கல், திருப்பத்தூர் மற்றும் சென்னை ஆகிய 11 மாவட்டங்களுக்கு புதிய கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.