தமிழகம் முழுவதும் குடிசை வீடுகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது .ஒரு மின்விளக்கு மட்டுமே இதில் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதில் சிலர் முறைகேடாக மின்சாரத்தை பயன்படுத்தி வருகிறார்கள். குடிசை வீட்டில் மாடி வீடாக கட்டிய பிறகும் இலவச மின்சாரத்தை பயன்படுத்துவது தெரியவந்துள்ளது. இந்நிலையில்  இலவச மின்சாரத்தை முறைகேடாக பெறுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மின் வாரியத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

தகுதி வாய்ந்தோருக்கு மட்டும் இலவச மின்சாரம் சென்றடைவதை உறுதி செய்யுமாறும், அனைத்து குடிசை இணைப்புகளையும் ஆய்வு செய்யுமாறும் கூறியுள்ள அவர், குடிசைக்காக மின் இணைப்பு பெற்று பின் வீடு கட்டப்பட்டிருந்தால், அந்த நுகர்வோரை 1A பட்டியில் கீழ் கொண்டு வர வேண்டும் எனவும் கூறியுள்ளார்.