
தமிழகத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் முகூர்த்த தினங்களில் கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று சுபமுகூர்த்த நாள் என்பதால் பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதில் 150 டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
இதேபோன்று 2 சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களில் 200க்கு பதில் 300 டோக்கன்கள் ஒதுக்கப்படும். இதன் பிறகு அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும் அலுவலகங்களில் 100-க்கு பதில் 150 டோக்கன்கள் விநியோகிக்கப்படும்.
மேலும் ஏற்கனவே வழங்கப்படும் 12 தட்கள் முன்பதிவுகளுடன் 4 தட்கள் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.