தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளிலும் குழந்தைகள் பயன்பெறும் விதமாக காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கடந்த மார்ச் மாதம் முதல்வர்  முக ஸ்டாலின்தொடங்கி வைத்தார். நகராட்சி, மாநகராட்சி, ஊராட்சி மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் ஒரு லட்சத்து 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும்.

இது குறித்து அரசு தற்போது முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியை 8.15 மணி முதல் 8.50 மணிக்குள் கொடுத்து விட வேண்டும் என சத்துணவு திட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.