முதலமைச்சரின் எண்ண ஓட்டங்களுக்கு ஏற்ப எல்லோருக்கும் எல்லாம் எனும் அடிப்படையில் தமிழகத்தை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என்று அமைச்சராக பொறுப்பேற்ற டிஆர்பி ராஜா தெரிவித்து உள்ளார்.

தலைமை செயலகத்தில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் அலுவலக அறையில் கோப்புகளில் கையெழுத்திட்டு அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் டிஆர்பி ராஜா தமிழ்நாட்டை தொடர்ந்து முன்னிலை மாநிலமாக உயர்த்துவோம் என உறுதியளித்தார்.