திருப்பூர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவரை காண உறவினர்கள் யாரும் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் அவரை மருத்துவமனை வெளிப்பகுதியில் உள்ள குப்பைத் தொட்டியில் குப்பை போல் ஊழியர்கள் வீசி சென்று உள்ளனர். அது மட்டுமல்லாமல் அவர் மீது மருத்துவமனை கழிவு பொருட்கள் கொட்டப்பட்டுள்ளது. மேலும் முதியவர் மீது ஈக்கள் மொய்க்க மழையில் நனைந்தபடி நாய்கள் அவரை சுற்றி குறைத்துக் கொண்டே இருக்கிறது. இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது.