
அரசு தேர்வுகள் இயக்ககம் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறி இருப்பதாவது, நடந்து முடிந்த மார்ச் 2025 மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுவின் மறு கூட்டல் மற்றும் மறு மதிப்பீடு கோரி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களின் மதிப்பெண் மாற்றம் உள்ள பதிவேண்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் நோட்டிபிகேஷன் என்ற பகுதியில் வருகிற 30-ஆம் தேதி அதாவது திங்கள்கிழமை அன்று பிற்பகல் முதல் வெளியிடப்பட உள்ளது.
இப்பட்டியலில் இடம்பெறாத பதிவென்களுக்கான விடைத்தாள்களில் எந்த ஒரு மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மறு கூட்டல் மறுமதிப்பீட்டல் மதிப்பெண் மாற்றம் உள்ள மாணவர்கள் மட்டும் மேல் குறிப்பிட்ட இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விபரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.