தமிழகம் முழுவதும் 10 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தர சான்று அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், திருவள்ளூர் மாவட்டம் விளாங்காடுபாக்கம், கரூர் பரமத்தி, கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி, திருச்சி மாவட்டம் சமயபுரம் கடலூர் மாவட்டம் அரசகுழி, குண்டியமல்லூர், தூத்துக்குடி மாவட்டம் மூக்குபிறி, கன்னியாகுமரி மாவட்டம் வடசேரி, சென்னை மாவட்டம் ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்து நிலைகளிலும் தரமாக விளங்குவதாக தெரிய வந்துள்ளது.

இதனால் இந்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேசிய தரச்சான்று அளிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களின் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் சிறப்பாக இருந்ததால் இந்த சான்று அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.