தமிழகத்தில் 1 முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி முதல் இரண்டாம் பருவ தேர்வு நடைபெற உள்ளது. என்னும் எழுத்தும் பாடத்திட்டம் தற்போது அமலில் உள்ள நிலையில் பருவ தேர்வு வினாத்தாள்கள் எஸ் சி இ ஆர் டி மூலமாக தயாரித்து வழங்கப்படுகின்றது. இந்த முறை இணையதளத்தில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் அதனை பதிவிறக்கம் செய்து தேவையான அளவுக்கு பிரதிகள் எடுத்து தேர்வை நடத்த வேண்டும் எனவும் பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒருபோதும் தேர்வு வினாத்தாள்களை வேறு பள்ளிகளுக்கு பகிரக்கூடாது. இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை மற்றும் வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான தேதிகள் அடங்கிய விவரங்கள் அனைத்தும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது