தமிழகம்,புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழக மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிக வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஓரிரு இடங்களில் இயல்பிலிருந்து இரண்டு முதல் நான்கு டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பம் இருக்க கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் போது வெப்ப அழுத்தம் காரணமாக அசோகரிகம் ஏற்படலாம் எனவும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்டோர் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.