தமிழக உள் மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்ப அலை வீசம் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதன்படி உள் மாவட்டங்களில் 2 டிகிரி வரை வெப்பநிலை உயரக்கூடும்.

அதன் பிறகு மே 2-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பிற பகுதிகளில் மே 1-ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.