
தமிழகத்தில் முத்திரைக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஒப்பந்த ஆவணங்கள், பவர் பத்திரம் வழங்குதல் உள்ளிட்ட 26 சேவைகளுக்கான முத்திரைக் கட்டணம் 10% முதல் 33% வரை, விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கெனவே சொத்து வரி, குடிநீர் வரி போன்றவற்றின் கட்டணங்கள் உயர்ந்துள்ள சூழலில், முத்திரைக் கட்டண உயர்வு மேலும் சுமையை உண்டாக்கும் என மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.