
நாடு முழுவதும் வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெறும் என்பதால் தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அரசு விடுமுறை நாளான அன்று அனைத்து பிரிவு அலுவலகங்களிலும் குறைந்த ஊழியர்களுடன் பணியாற்றுமாறு மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.