
வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது போன்று தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் வருகிற 14-ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதைப்போல புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில் இந்த மாதிரி 11ஆம் தேதி தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் உள்பகுதிகளில் வருட வானிலை நிலவக்கூடும். பொதுவாக காலை நேரத்தில் பனிமூட்டம் நிலவும். மேலும் சென்னையை பொருத்தவரை மானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு பனிமூட்டத்திற்கும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.