
தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் மகளிர்க்கு ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஒரு கோடிக்கும் அதிகமான பெண்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறார்கள். அதன் பிறகு தற்போது புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அவர்களும் மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்ததோடு விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும் என்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் மாதந்தோறும் 15ஆம் தேதி பெண்களின் வங்கி கணக்கில் மகளிர் உரிமைத்தொகை பணம் வரவு வைக்கப்படும் நிலையில் தற்போது 14வது தவணைத்தொகை பணம் பயனர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இன்று காலை பயனர்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இது குறித்தான மெசேஜ் உங்களுடைய பதிவு செய்யப்பட்ட செல்போன் நம்பருக்கு வரும். மேலும் மகளிர் அனைவரும் ஆயிரம் பணம் வந்து விட்டதா என்பதை உடனே செக் பண்ணி பார்த்து தெரிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.