தமிழகத்தில் பிஇ மற்றும் பிடெக் போன்ற படிப்புகளுக்கான பொறியியல் கல்லூரிகளில் சேர நடைபாண்டில் ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று  வெளியிடுகின்றார். இது குறித்து மாணவர்கள் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான புகார்கள் கூற ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்த வருடம் பொறியியல் கலந்தாய்வில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என உயர்கல்வித்துறை கூறியது குறிப்பிடத்தக்கது.