தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகளில் புதிதாக 1,282 பணியிடங்களை உருவாக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. நகராட்சிகளில் பணியிடங்கள் பிரிவு, துறை வாரியாக வரையறை செய்யப்பட்டுள்ளன. அதன்படி சில நகராட்சிகளில் கூடுதலாக இருந்த பணியிடங்கள், பற்றாக்குறை உள்ள நகராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டன.

இருப்பினும் தற்போது புதிய பணியிடங்கள் உருவாக்க வேண்டிய தேவை எழுந்ததால், இதற்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. நகராட்சி வாரியான புதிய பணியிட விபரங்கள், அந்தந்த மண்டல அளவில் பிறப்பிக்கப்படும் உத்தரவுகள் வாயிலாகதெரிவிக்கப்படும் என்று அரசாணையில் கூறப்பட்டுள்ளது.