தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் மூத்த முதல்நிலை ஆசிரியர்களுக்கு முதன்மை கண்காணிப்பாளர் பொறுப்பு வழங்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டுள்ளது. வருகின்ற மார்ச் 13ஆம் தேதி முதல் பிளஸ் ஒன் மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொது தேர்வு தொடங்குகிறது. என் நிலையில் தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள் மட்டுமே முதன்மை கண்காணிப்பாளர்களாக நியமிக்க வேண்டும் என்று அரசு தேர்வு துறை உத்தரவிட்டிருந்தது.

அதனால் பல மாவட்டங்களில் முதன்மை கண்காணிப்பாளர் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை மட்டுமல்லாமல் பணி மூப்பில் முன்னிலையில் உள்ள முதல் நிலை உள்ள முதுநிலை ஆசிரியர்கள் உள்ளிட்டோரையும் முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கலாம் என்று அரசு தேர்வு துறை சார்பாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.