
தமிழகத்தில் சமீபத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. கடந்த வருடத்தை விட இந்த வருடம் மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
அதன் பிறகு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு துணைத்தேர்வுகள் நடைபெறும் தேதியும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது மறு கூட்டல் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
அதன்படி நாளை முதல் அதாவது ஜூன் 5-ம் தேதி முதல் மாணவர்கள் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது. மறு கூட்டல் அல்லது மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மறு கூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கான விண்ணப்ப படிவத்தை ஜூன் 5-ம் தேதி முதல் ஜூன் 7-ம் தேதி வரை மாவட்ட தேர்வுகள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.