தமிழகத்தில் திமுக ஆட்சியில் ஆன்மீகம் முற்றிலும் இல்லை , இனிவரும் காலத்தில் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி வரவேண்டும் என்ற பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அண்ணாமலை, தமிழ் கலாச்சாரம் என்பது இறை கலாச்சாரம் அனைத்து இறை புத்தகங்களும் ஆன்மீகப் பாதையில் இருக்கக்கூடியது. சனாதனத்தை வேறொறுப்போம் என்று சொன்னால் தேவாரம் மற்றும் திருவாசகம் உள்ளிட்ட எத்தனை புத்தகங்களில் நீங்கள் கொளுத்துவீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு புத்தகத்திலும் கடவுள் உள்ளார்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய திமுக ஆட்சியில் ஆன்மீகம் என்பது முற்றிலும் இல்லை. வரும் காலத்தில் தமிழகத்தில் ஆன்மீக ஆட்சி மலர வேண்டும். இதனால் யாருக்கும் பாதகம் இல்லை. ஆன்மீக ஆட்சியில் தான் இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் நலமாக இருப்பார்கள். தமிழகத்தில் ஒரு விஷயத்தை அளிக்க வேண்டும் என்றால் முதலில் ஊழலை தான் அழிக்க வேண்டும். பின்னர் டாஸ்மாக் கடைகளை அழிக்க வேண்டும். இதை தவிர்த்து சனாதனத்தை அழிப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று அண்ணாமலை பேசியுள்ளார்.