தமிழகத்தில் அரசு சார்பாக அனைத்து துறை ஊழியர்களுக்கும் பல்வேறு வசதிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அரசின் கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான அனைத்து வித கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வரும் நிலையில் தற்போது தமிழக அரசு கூட்டுறவு சங்க ஊழியர்களின் வீட்டு வசதி கடன் தொகையை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக வீட்டு வசதி கடன் கூட்டுறவு துறை ஊழியர்களுக்கு 5 லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் தற்போது இந்த தொகை 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக உறுப்பினர்களின் வயது வரும் வரை கருத்தில் கொண்டு கடன் தொகை திருப்பி செலுத்தும் தவணை காலத்தையும் நிர்ணயம் செய்ய வேண்டும் என தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது.