சேலம் மாவட்டத்தில் எடப்பாடி தொகுதியில் இன்று(ஏப்ரல் 3) நடந்த செயல்வீரர்கள் கூட்டதில் நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், எடப்பாடி தொகுதி என்பது அதிமுகவின் கோட்டை. நான் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, எங்கு பார்த்தாலும், அதிமுக அலைதான் வீசிக் கொண்டிருக்கிறது. நாற்பதுக்கு நாற்பது என அனைத்திலும் அதிமுக வெற்றி பெறும் என்று தெரிவித்தார்.