தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது வருடம் தோறும் இலவச வேட்டி சேட்டைகள் வழங்கப்படுவது வழக்கம். அதாவது ரேஷன் கடைகள் மூலமாக இலவச வேட்டி சட்டைகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலை திட்டத்திற்காக தமிழக அரசு நிதி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த திட்டத்திற்காக சுமார் 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு சுமார் 1.77 கோடி சேலை மற்றும் 1.77 போடி வேஷ்டிகள் தயாரிக்கவும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு பயனாளிகளுக்கு வேட்டி சேலைகள் கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகை பதிவு செய்வது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேட்டி சேலைகளை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தயாரித்து ‌ வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச வேஷ்டி சேலைகள் வழங்கும் நடைமுறையை கண்காணிக்க வருவாய்த்துறை முதன்மை செயலாளர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.