
தமிழகத்தில் வார இறுதி மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு 600 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை சென்னை மற்றும் பிற இடங்களில் இருந்து பயணிகள் சிரமம் இல்லாமல் பயணம் மேற்கொள்ள தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக போக்குவரத்து துறை திட்டமிட்டுள்ளது.
சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு செப்டம்பர் 8 தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 300 சிறப்பு பேருந்துகளும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் ஆகிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 600 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.