தமிழகத்தில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மலர் சந்தைகளில் பூக்களின் விலை கிடுகிடுவென்று உயர்ந்துள்ளது. அதன்படி மல்லிகை பூ ஒரு கிலோ 1200 ரூபாய், முல்லை பூ கிலோ 700 ரூபாய், பிச்சிப்பூ கிலோ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சம்பங்கி, கனகாம்பரம், செண்டுமல்லி, ஜாதி மல்லி, கோழி கொண்டை, ரோஜா, அரளி, பட்ரோஸ் என அனைத்து வகையான பூக்களின் விலையும் இன்று அதிகரித்துள்ளது.