தமிழ்நாட்டில் 500 டாஸ்மாக் கடைகள் இன்று முதல் மூடப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. 500 மதுபான சில்லறை விற்பனை கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து மூடப்படும் கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடந்தது. தற்போது கணக்கெடுப்பு பணிகள் முடிந்த நிலையில், இன்று  முதல் 500 டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, சென்னை மண்டலம் 138 கடைகள், கோவை மண்டலம் – 78 கடைகள், மதுரை மண்டலம் – 125 கடைகள், சேலம் மண்டலம் – 59 கடைகள், திருச்சி மண்டலம் – 100 கடைகள் மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மூடப்படும் இந்த கடைகளில் பெரிய அளவில் விற்பனை இல்லை எனவும் கூறப்படுகிறது.