ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை அமல்படுத்த பல தரப்பினரும் தங்களின் ஆதரவை தெரிவித்து வரும் நிலையில், பிரதமர் மோடி ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்தி அதிபராக முயற்சி செய்வதாக முதலில் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக சொல்வதை செய்ய வேண்டும் என்பதற்காகவே குழுவின் தலைவராக ராம்நாத் கோவிந்த் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

இந்த விவகாரத்தில் பலியாக போவது அதிமுக தான் என்று தெரியாமல் அவர்கள் ஆதரிக்கின்றனர். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்து 2.5 ஆண்டுகள் தான் ஆகிறது. நாடாளுமன்ற தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலை நடத்துவதற்காக ஆட்சியை கலைத்து விடுவீர்களா? யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.