
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் தங்கிய பயிலும் நிலையில் அவர்களுக்கு மாதந்தோறும் உணவுக்காக ஆயிரம் ரூபாய் அரசு சார்பில் வழங்கப்படுகிறது. இந்த தொகை 1400 ரூபாயாக உயர்த்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு கல்லூரி விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1100 ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த தொகை 1500 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவ மாணவியர் தங்கும் விடுதிகளை பழுது நீக்கம் செய்யும் சீரமைப்பு சிறப்பு திட்டம் வழங்கப்படும். இந்த திட்டம் இரண்டு ஆண்டுகள் செயல்படுத்தப்படும் எனவும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு இணைப்பு சாலைகள் அமைக்கும் பணிகளை துரிதப்படுத்த தேவையான அனுமதிகளை வழங்க தலைமைச் செயலாளர் தலைமையில் வழிகாட்டு குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.