தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேசமயம் நாளை டெல்டா மாவட்டங்களுக்கு அதிக கன மழை பெய்வதற்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தஞ்சை, திருவாரூர் மற்றும் நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் ஆலோசித்து முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளன.