தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்த சூழலில் மே மாதம் தொடக்கத்தில் கத்திரி வெயில் எனும் அக்னி நட்சத்திரம் தொடங்கியதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தற்போது அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு வெயில் கொளுத்தி எடுக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதன்படி வருகின்ற ஜூன் ஐந்தாம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் எனவும் இன்னும் சில இடங்களில் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும் எனவும் தெரிவித்துள்ளது. எனவே வெயில் நேரத்தில் குழந்தைகள், கர்ப்பிணிகள் மற்றும் முதியோர்கள் வெளியே வர வேண்டாம் என்றும் ஒருவேளை வெளியே சென்றாலும் அடிக்கடி தண்ணீர் மற்றும் மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.