தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில் காவிரி விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க வருகின்ற புதன்கிழமை ஆகஸ்ட் 23ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கும் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவகுமார் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த கூட்டத்திற்கு பிறகு முக்கிய முடிவு எடுக்கப்படும் என தெரிகின்றது. மேலும் காவிரி விவகாரம் தொடர்பாக வழக்கை உரிய வாதங்களுடன் எதிர்கொள்ள தயாராக உள்ளதாகவும் கர்நாடக துணை முதல்வர் டி.கே சிவக்குமார் தகவல் தெரிவித்துள்ளார்.