மத்திய பிரதேசம் மாநிலம் உஜ்ஜைன் என்ற மாவட்டத்தில் பேட் நகரில் நேற்று அதிகாலையில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. திலீப் பவார் என்ற நபர் கடந்த சனிக்கிழமை இரவு குடிபோதையில் தனது செல்ல நாய் தூங்கிக் கொண்டிருந்தபோது குறைத்ததால் அதனை கொல்ல முயன்றார். இதற்கு மனைவி எதிர்ப்பு தெரிவித்ததால் அவர் மனைவியை கத்தியால் குத்தினார். இதனை தொடர்ந்து இரண்டு குழந்தைகளும் கொடூரமாக தாக்கப்பட்ட உயிரிழந்தன.

அதன் பிறகு கழுத்தை அறுத்துக் கொண்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.