அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் விழா கோலம் பூண்டுள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் ஜனவரி 22ஆம் தேதி நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திலும் ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை பார்க்கும் வகையில் தமிழகத்தில் நாளை பொது விடுமுறை அளிக்க வேண்டும் என்று அரசுக்கு ஓபிஎஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.