
உலகில் பல நாடுகளில் தன் பாலின இருப்பினர் திருமணத்திற்கு சட்டபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் தன் பாலின ஈர்ப்பு திருமணத்தை சிறப்பு திருமண சட்டத்தில் சேர்க்க வழங்க வேண்டும் என வழக்கு தொடரப்பட்ட நிலையில் அந்த அதிகாரம் மத்திய அரசுக்கு தான் அதாவது நாடாளுமன்றத்திற்கு இருப்பதாக கூறியதோடு அதனை சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் சேர்க்க முடியாது என்று அப்போதைய தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு தீர்ப்பு வழங்கியது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு 25 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது விருப்பத்திற்கு மாறாக ஒரு பெண்ணுடன் செல்ல குடும்பத்தினர் தடுப்பதாக வழக்கு தொடர்ந்துள்ளார். அதாவது தன் பாலின ஈர்ப்பின் வெளிபாடாக ஒரு பெண்ணுடன் செல்ல அந்த பெண் விரும்பிய நிலையில் அதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததால் தான் ஒரு மேஜர் என்பதால் அவர்கள் தலையிட அதிகாரம் கிடையாது எனக் கூறி வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்றம் தன் பாலின ஈர்ப்பாலர் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் இல்லையே தவிர அவர்கள் குடும்பமாக இருக்க முடியும். திருமணம் என்பது மட்டுமே ஒரு குடும்பத்தை உருவாக்குவது கிடையாது. எனவே அந்த 25 வயது பெண் அவர் விரும்பியவுடன் செல்லலாம் என்றது.
மேலும் நீதிபதிகள் ஜி. ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமி நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில் அந்த பெண்ணுக்கு மற்றொரு பெண்ணுடன் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியுள்ளது.