வேலூர் மாவட்டம் இலவம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவர் கட்டிட மேஸ்திரி. கடந்த 2019-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தார். இதை அறிந்த மணிவண்ணன் அத்துமீறி அந்த பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மணிவண்ணனை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் நேற்று விசாரணை முடிந்து தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் குற்றம் சாட்டப்பட்ட மணிவண்ணனுக்கு 30 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மணிவண்ணன் வேலூர் மத்திய சிறை சாலையில் அடைக்கப்பட்டார்.